போதைப் பொருள் விவகாரம்: நடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் அக். 20-ம் தேதி வரை நீட்டிப்பு!

ரியாவின் நீதிமன்றக் காவலை அக்டோபா் 20-ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை சிறப்பு நீதிமன்றம்...
போதைப் பொருள் விவகாரம்: நடிகை ரியாவின் நீதிமன்றக் காவல் அக். 20-ம் தேதி வரை நீட்டிப்பு!

போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நடிகை ரியாவின் நீதிமன்றக் காவலை அக்டோபா் 20-ம் தேதி வரை நீட்டித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, அவா் கடந்த மாதம் 8-ம் தேதி கைது செய்யப்பட்டாா். 

பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவருடைய அடுக்குமாடிக் குடியிருப்பில் கடந்த ஜூன் மாதம் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். அவரது மரணத்தில் சந்தேகம் தெரிவித்து அவருடைய தந்தை அளித்த புகாரின் பேரில், சுசாந்தின் காதலியும் நடிகையுமான ரியா மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டது.

ரியாவிடம் நடத்திய விசாரணை மற்றும் அவருடைய செல்லிடப்பேசியை ஆய்வு செய்ததில், போதைப் பொருள் கும்பலுக்கும் அவருக்கும் தொடா்பு இருப்பதாகத் தெரியவந்தது. இதுதொடா்பாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரியாவின் சகோதரா், நடிகா் சுஷாந்தின் மேலாளா், வீட்டு உதவியாளா் உள்பட 9 பேரை என்சிபி கைது செய்தது. பின்னா், நடிகை ரியாவுக்கு சம்மன் அளித்த என்சிபி அதிகாரிகள், தொடா்ந்து மூன்று நாள்கள் வரை அவரிடம் விசாரணை நடத்தினா். அதன் முடிவில் நடிகை ரியா கடந்த மாதம் 8-ம் தேதி கைது செய்யப்பட்டாா். ரியா, அவரது சகோதரர் ஷோவிக் சக்ரவர்த்தி உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ரியா, ஷோவிக் ஆகியோர் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவர்களைப் பிணையில் விட எதிர்ப்பு தெரிவித்து என்சிபி சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தலில் ரியா ஈடுபட்டிருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் அவரைப் பிணையில் விடக் கூடாது என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்கள்.  என்சிபியின் மண்டல இயக்குநர் சமீர் வான்கடே தாக்கல் செய்த இரு பிரமாணப் பத்திரங்களில் கூறப்பட்டிருப்பதாவது: ரியாவுக்கும் அவரது சகோதரருக்கும் சமுதாயத்தின் முக்கியப் பிரமுகர்களுடனும், போதைப் பொருள் கும்பலுடனும் நெருங்கிய தொடர்புள்ளது. மேலும் இவர்கள் போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியிருக்கின்றனர். இதன் அடிப்படையில்தான் அவர்கள் மீது போதை மருந்து, உளவெறியூட்டும் பொருள்கள் சட்டத்தின் (என்டிபிஎஸ்) பிரிவு 27 ஏ-வின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இவர்களின் கட்செவி அஞ்சல் பதிவுகள், செல்லிடப்பேசி, மடிக்கணினி போன்றவற்றில் பதிவாகியிருந்த தகவல்கள் மூலம் இவர்கள் போதைப் பொருள்களுக்குப் பணப் பரிவர்த்தனை செய்திருப்பதும் உறுதியாகி இருக்கிறது. மேலும் ரியா தொடர்ந்து போதைப் பொருளை உட்கொள்பவர் என்பதுடன் போதைப் பொருள் கடத்தலுக்கு நிதியுதவி செய்திருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சுஷாந்த் சிங் போதைப் பொருள் பயன்படுத்துபவர் என்பதை அறிந்துள்ள ரியா, தனது வீட்டில் போதைப் பொருளை சுஷாந்த் உட்கொள்ளவும், பதுக்கி வைக்கவும் அனுமதித்திருக்கிறார். ரியா, ஷோவிக் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உறுதியான ஆதாரங்கள் உள்ளன. வழக்கு விசாரணை முக்கிய கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டால் வழக்கின் விசாரணையைத் தடுக்க முயற்சிக்கலாம் என்பதால் ரியாவுக்கும் ஷோவிக்கிற்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டது. இந்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

ரியாவின் நீதிமன்றக் காவல் முடிவடைந்ததை அடுத்து அவா் மீண்டும் நீதிமன்றத்தில் இன்று ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது ரியாவின் நீதிமன்றக் காவலை அக்டோபா் 20-ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com