மருத்துவமனையில் இரவு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் அபிஷேக் பச்சன்!

மருத்துவமனையின் புகைப்படத்தை வெளியிட்டு இரவு நடைப்பயிற்சி மேற்கொள்வதைக் குறிப்பிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இரவு நடைப்பயிற்சி மேற்கொள்ளும் அபிஷேக் பச்சன்!

கரோனா நோய்த் தொற்றால் அமிதாப் பச்சனின் (77) குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 

மிதமான அறிகுறிகள் தென்பட்டதால் அமிதாப் பச்சனும் அபிஷேக் பச்சனும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். அமிதாப்பின் மனைவி ஜெயா பச்சனுக்கு தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்டாலும் அறிகுறிகள் எதுவும் இல்லாததால் ஐஸ்வர்யா ராயும் மகள் ஆராத்யாவும் அவர்களுடைய வீட்டில் முதலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்கள். எனினும் பிறகு இருவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்கள். 

கரோனா பாதிப்பிலிருந்து மீண்ட ஐஸ்வர்யா ராயும் அவருடைய மகள் ஆராத்யாவும் ஜூலை 27 அன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குத் திரும்பினார்கள். இத்தகவலை நடிகர் அபிஷேக் பச்சன் தெரிவித்தார். 

இந்நிலையில் மருத்துவமனையில் இரவு நடைப்பயிற்சியில் ஈடுபடுவதாக அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். இன்ஸ்டகிராமில் மருத்துவமனையின் புகைப்படத்தை வெளியிட்டு இரவு நடைப்பயிற்சி மேற்கொள்வதைக் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Abhishek Bachchan (@bachchan) on

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com