காயத்ரி ராகுராம் இயக்கியுள்ள யாதுமாகி நின்றாய் படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நேரடியாக இன்று வெளியாகியுள்ளது.
காயத்ரி ரகுராம் நடித்து இயக்கியுள்ள படம் - யாதுமாகி நின்றாய். கதாநாயகியாக நடிக்க ஆசைப்படும் பெண் ஒருவர், சென்னைக்கு வந்து குரூப் டான்சரான கதையைப் படமாக எடுத்துள்ளார் காயத்ரி ரகுராம். உண்மைச் சம்பவங்களின் பின்னணியில் இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இசை - அஸ்வின் வினாயக மூர்த்தி.
பல காரணங்களால் இப்படத்தின் வெளியீடு தள்ளிப் போன நிலையில் ஜீ5 ஓடிடி தளத்தில் யாதுமாகி நின்றாய் படம் இன்று வெளியாகியுள்ளது.
இதுபற்றி காயத்ரி ரகுராம் கூறியதாவது:
ஓர் இயக்குநராக இது என்னுடைய முதல் குழந்தை. உங்களுக்கு நேரம் இருக்கும்போது அனைவரும் கண்டுகளியுங்கள். நான் பார்த்த என் மனத்துக்கு நெருக்கமான கதை இது என்று கூறியுள்ளார்.