நயன்தாராவை வைத்துதான் அறம் 2 படத்தை எடுப்பேன்: இயக்குநர் உறுதி!

அறம் 2 படத்துக்காக கீர்த்தி சுரேஷை அணுகவில்லை என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.
நயன்தாராவை வைத்துதான் அறம் 2 படத்தை எடுப்பேன்: இயக்குநர் உறுதி!
Updated on
1 min read

அறம் 2 படத்துக்காக கீர்த்தி சுரேஷை அணுகவில்லை என்று இயக்குநர் கோபி நயினார் கூறியுள்ளார்.

2017-ல் நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் வெளியான அறம் படம் பெரிய வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான பிறகு இதன் அடுத்த பாகம் வெளிவரும் என்று தயாரிப்பாளர் கே. ராஜேஷ் கூறினார்.

இந்நிலையில் அறம் 2 படத்தை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கோபி நயினார் இயக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் ஒரு பேட்டியில் இதை மறுத்துள்ளார் கோபி நயினார். அவர் கூறியதாவது:

நயன்தாராவை வைத்துதான் அறம் 2 படத்தை எடுப்பேன். வேறு யாரை வைத்தும் அந்தப் படத்தை எடுக்கமாட்டேன். தற்போது வெளியான செய்தி வதந்தியாகும். இதனால் நான் கவலையில் உள்ளேன். கரோனா ஊரடங்கு காரணமாக படம் எப்போது தொடங்கும் என என்னால் இப்போது கூறமுடியாது என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com