ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சின்னத்திரை நடிகை மரணம்

மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா சசி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  

News image
Updated On :10 ஆகஸ்ட் 2021, 8:10 am

DIN

மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த பிரபல சின்னத்திரை நடிகை சரண்யா சசி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.  

தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான 'பச்சை என்கிற காத்து' என்ற படத்தில் நடித்தவர் நடிகை சரண்யா சசி. இவர் மலையாளத்தில் ஏராளமான படங்களிலும், சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 

இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மூளை புற்றுநோயினால் பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் அவருக்கு நோய் முற்றிலும் குணமாகவில்லை. அவரது மருத்துவ செலவுகளுக்காக நண்பர்கள் மற்றும் சின்னத்திரை நடிகர் சங்கம் தொடர்ந்து உதவி செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் அவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். அவரது உடல் நிலை மோசமடைந்ததையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி இன்று (செவ்வாய் கிழமை) உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.