

கடந்த சில நாட்களுக்கு முன் சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், ''சினிமாவிற்கு சாதி, மதம், கிடையாது. யார் என்ன கூறினாலும் பரவாயில்லை.
இங்கு விளக்கை அணைத்தால் ஒரே ஒளி மட்டும் தான்'' என்று பேசினார். இந்த நிலையில் கமல்ஹாசனின் கருத்து குறித்து இயக்குநர் பா.ரஞ்சித் பதிலளித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித் அளித்துள்ள பதிலில், ''திரைப்படத்துறையில் சாதி உள்ளது எனும் நிலைப்பாட்டில் நான் தெளிவாக உள்ளேன். அதை எண்ணால் உணர முடிகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.