நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிக்கும் இணையத்தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார் சரத் குமார்.
தூங்காவனம், கடாரம் கொண்டான் படங்களை இயக்கிய ராஜேஷ் எம். செல்வா அடுத்ததாக இரை என்கிற இணையத்தொடரை இயக்குகிறார். நடிகை ராதிகாவின் ராடன் நிறுவனம் தயாரிக்கிறது. இதன்மூலம் இணையத்தொடரில் அறிமுகமாகிறார் நடிகர் சரத் குமார்.
ஜிப்ரான் இசையமைக்கும் இரை இணையத்தொடரின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளது.