ஆண் குழந்தைக்குத் தந்தையானார் நடிகர் சிவகார்த்திகேயன்

என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி...
ஆண் குழந்தைக்குத் தந்தையானார் நடிகர் சிவகார்த்திகேயன்
Updated on
1 min read

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன், ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார். 

2011-ல் ஆர்த்தியைத் திருமணம் செய்தார் சிவகார்த்திகேயன். 2013-ல் ஆராதனா என்கிற மகள் பிறந்தார்.

இந்நிலையில் ஆண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது: 

18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் என்று கூறியுள்ளார். 

ஆண் குழந்தைக்குத் தந்தையான சிவகார்த்திகேயனுக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com