
கார்த்தி அறிமுகமான பருத்திவீரன் படத்தில் நடித்த பஞ்சவர்ணம் உடல்நலக்குறைவால் காலமானார்.
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிகராக அறிமுகமான படம் - பருத்திவீரன். இந்தப் படத்தில் அப்பத்தாவாக நடித்து கவனம் பெற்றார் பஞ்சவர்ணம்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் காலமானார் பஞ்சவர்ணம். இதையடுத்து நடிகர் கார்த்தி ட்விட்டரில் கூறியதாவது:
பருத்திவீரனில் எனது அப்பத்தாவாக வாழ்ந்த பஞ்சவர்ணம் பாட்டி இறந்த செய்தி அறிந்தேன். அவரின் பாசமான குரலும், வெள்ளந்தி சிரிப்பும் இன்றும் என் கண் முன்னே நிற்கிறது. அவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.