கேரளம், அஸ்ஸாமில் வேட்புமனு தாக்கல் இன்று கடைசிஅமெரிக்காவில் இருந்து இந்தியா வந்தது 16,700 மெட்ரிக் டன் எல்பிஜிதேர்தல் நடவடிக்கையால் ‘ஹெச்பிவி' தடுப்பூசி திட்டம் பாதிக்காது: சுகாதாரத் துறைவெளிப்பகுதி பறவைகளால் கிண்டி பூங்காவில் பரவிய பறவைக் காய்ச்சல்! ஹோர்முஸ் நீரிணையைத் திறக்க ஈரானுக்கு டிரம்ப் 48 மணி நேர கெடுமுதல்வர் ஸ்டாலினுடன் மார்க்சிஸ்ட் குழு சந்திப்பு! இன்று தொகுதி உடன்பாடு?தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிரான நோட்டீஸ் மீது நடவடிக்கை எப்போது?எதிா்க்கட்சிகள் காத்திருப்பு! கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை கருத்து: நடிகர் பிருத்வி ராஜின் புகைப்படத்தை எரித்து போராட்டம்

முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த நடிகர் பிருத்வி ராஜின் புகைப்படத்தை எரித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :25 அக்டோபர் 2021, 12:47 pm

DIN


முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்த நடிகர் பிருத்வி ராஜின் புகைப்படத்தை எரித்து பார்வர்டு பிளாக் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பிரபல மலையாள நடிகரான பிருத்வி ராஜ் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் முல்லை பெரியாறு அணை தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதில், உண்மை மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் இந்த 125 ஆண்டுகள் பழமையான முல்லைப் பெரியாறு அணை செயல்படுவதற்கு எந்த காரணமும் இல்லை. நம் அரசியலையும், பொருளாதாரத்தையும் தள்ளி வைத்துவிட்டு எது சரியோ அதனை செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். 

அவரது கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. மேலும் வழக்கறிஞர் ரசூல் ஜோய் என்பவரும், மருத்துவர் ஜோசஃப் என்பவரும் அணை பலவீனமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இதனையடுத்து தேனி மாவட்ட அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர் , தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது முல்லை பெரியாறு அணை குறித்து தவறான கருத்து தெரிவிப்பதாகக் கூறி நடிகர் பிருத்விராஜ், வழக்கறிஞர் ரசூல் ஜோய், மருத்துவர் ஜோசஃப் ஆகியோரின் உருவப் படத்தை எரித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.