தனது வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு நடந்து வந்து வாக்களித்துள்ளார் நடிகர் விக்ரம்
தமிழகத்தில் 234 பேரவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37 ஆயிரம் இடங்களில் உள்ள 88,937 வாக்குச் சாவடிகளிலும் தகுந்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இன்று காலை முதல் திரையுலகப் பிரபலங்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகிறார்கள்.
நடிகர் விஜய், சைக்கிளில் வந்து நீலாங்கரைப் பகுதியில் தனது வாக்கினைச் செலுத்தினார். இந்நிலையில் நடிகர் விக்ரம், சென்னை பெசன்ட் நகர் வீட்டிலிருந்து வாக்குச்சாவடிக்கு நடந்தே சென்று வாக்களித்தார். இதன் விடியோ வெளியாகியுள்ளது.