அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கும் நிலையில், புதிதாக சான்யா மல்ஹோத்ராவும் இணைந்துள்ளார்.
பிகில் படத்துக்குப் பிறகு இயக்குநர் ஷாரூக்கான் நடிப்பில் ஹிந்திப் படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார்.
இந்த நிலையில் இந்தப் படத்தில் 'தங்கல்' புகழ் சான்யா மல்ஹோத்ரா நடிக்கிறார். மேலும் இந்தப் படத்தில் நடிகர் ஷாரூக்கான் இரட்டை வேடங்களில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்க அட்லி முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
முதலில் இந்தப் படத்தின் டீஸர் படமாக்கப்பட்டு விட்டதாகவும், கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்பட்டது. இதனையடுத்து ஷாரூக்கான் ரசிகர்கள் டீசரை எதிர் நோக்கி காத்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்தப் படத்தை 180 நாட்கள் படமாக்க அட்லி திட்டமிட்டுள்ளாராம்.