மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

பிரபல நடிகைக்கு ஆண் குழந்தை

அதிகச் சம்பளம் பெறும் நடிகைகளில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதலிடத்தில் உள்ளார்.

Published On :

2018 முதல் உலகளவில் அதிகச் சம்பளம் பெறும் நடிகைகளில் ஸ்கார்லெட் ஜோஹன்சன் முதலிடத்தில் உள்ளார். அவருடைய சம்பளம் ரூ. 400 கோடி. 

36 வயது ஸ்கார்லெட் ஜோஹன்சன், நகைச்சுவைக் கலைஞர் கோலின் ஜோஸ்டைக் கடந்த வருடம் திருமணம் செய்தார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டார்கள். 

லாஸ்ட் இன் டிரான்ஸ்லேசன், கேர்ள் வித் அ பேர்ல் இயரிங், மேரேஜ் ஸ்டோரி, ஜோஜோ ரேபிட், மேட்ச் பாயிண்ட் போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார் ஸ்கார்லெட் ஜோஹன்சன். 2008-ல் கனடாவைச் சேர்ந்த நடிகரான ரையன் ரெனால்ட்ஸை முதலில் திருமணம் செய்தார். 2011-ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. பிரான்சைச் சேர்ந்த ரொமைனை 2014-ல் திருமணம் செய்தார். 2017-ல் இருவருக்கும் விவாகரத்து ஆனது. இவர்களுக்கு ரோஸ் என்கிற 6 வயது மகள் உண்டு. பிறகு 38 வயது நகைச்சுவைக் கலைஞரான கோலின் ஜோஸ்டைத் திருமணம் செய்தார். 

இந்நிலையில் ஸ்கார்லெட்டுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இத்தகவலை இன்ஸ்டகிராமில் தெரிவித்துள்ளார் கோலின் ஜோஸ்ட். எங்களுக்குக் குழந்தை பிறந்துள்ளது. அவன் பெயர் காஸ்மோ என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.