நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

''ரஜினிக்கு தைரியம் இருக்கிறதா ?'': சவால் விட்ட பிரபல இயக்குநர்

நடிகர் ரஜினிகாந்த் குறித்து பிரபல இயக்குநர் தெரிவித்த கருத்து வைரலாகி வருகிறது. 

News image
Updated On :7 டிசம்பர் 2021, 6:19 pm IST

அல்லு அர்ஜுன் - ஃபகத் பாசில் இணைந்து நடித்துள்ள புஷ்பா திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வெளியான சில மணி நேரங்களிலேயே 2 கோடி பார்வையாளர்களைப் பெற்றது. 

இந்தப் படம் செம்மரக் கடத்தலை மையப்படுத்தி உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடிக்க வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். சுகுமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் முதல் பாகம் வருகிற 17 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

Story image

இந்த நிலையில் இயக்குநர் ராம் கோபால்வர்மா தனது சுட்டுரைப் பக்கத்தில், அல்லு அர்ஜுன் என்ற ஒரே சூப்பர் ஸ்டார் தான் இதுபோன்ற யதார்த்தமான வேடங்களை செய்பவர். பவன் கல்யாண், மகேஷ் பாபு, சிரஞ்சீவி, ரஜினிகாந்த் போன்றவர்களுக்கு இதுபோன்ற வேடங்களை ஏற்பதற்கு தைரியம் இருக்கிறதா என கேள்வி எழுப்பியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.