பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரன் : கமல்ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரன் அபினயை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரன் : கமல்ஹாசன் என்ன சொன்னார் தெரியுமா ?

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்ரியின் பேரன் அபினயை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தினார். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி நேற்று (அக்டோபர் 3) மிக பிரம்மாண்டமாக துவங்கியது. இந்தப் போட்டியில் பங்கேறப்வர்களை தனக்கே உரிய முறையில் அறிமுகப்படுத்தினார் நடிகர் கமல்ஹாசன். 

இந்த போட்டியில் விஜய் டிவியில் இருந்து தொகுப்பாளர் பிரியங்கா தேஷ்பாண்டே, நாம் இருவர் நமக்கு இருவர் மூலம் பிரபலமான ராஜூ ஜெயமோகன், சின்னத்திரை நடிகை பவானி ரெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும், யூடியூப் விமர்சகர் அபிஷேக் ராஜா, நடிகர் அபினய், நதியா சாங், நகைச்சுவை நடிகர் இமான் அண்ணாச்சி, கௌதம் மேனனின் ஜோஷ்வா பட கதாநாயகன் வருண், நமிதா மாரிமுத்து, மாஸ்டர் பட நடிகர் சிபி சந்திரன், நாடக கலைஞர் தாமரைச் செல்வி, ஸ்ருதி ஜெயதேவன் ஆகியோர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். 

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள அபினய், கணித மேதை ராமானுஜரின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ராமானுஜராக நடித்திருந்தார். இவர் நடிகர் ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியின் பேரன் ஆவார். 

அபினயை அறிமுகப்படுத்தும் போது, களத்தூரில் கண்ணம்மாவில் தன்னை அறிமுகப்படுத்திய ஜெமினி கணேசன் - சாவித்திரியின் பேரனை பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்துவதில் பெருமை என்றார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com