தமிழகத்தில் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்: சென்னையில் முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்!இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்பு!ஓராண்டில் 229 சிறப்பு ரயில்களை இயக்கி தெற்கு ரயில்வே சாதனை7 - 9 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு மும்மொழிக் கொள்கை பொருந்தாது: சிபிஎஸ்இமது இல்லாத நகராட்சியாக மாறியது அரக்கோணம் நகராட்சி! முதல்வர் விஜய்க்கு மக்கள் பாராட்டு!
/

'பிக்பாஸின் ஆட்டம் ஆரம்பம்': என்ன சொல்கிறார் முன்னாள் பிக்பாஸ் டைட்டில் வின்னர்: ரசிகர்கள் குழப்பம்

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவை பகிரும் ஆரி, பிக்பாஸின் ஆட்டம் துவங்கிவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். 

News image
Updated On :6 அக்டோபர் 2021, 11:19 am IST

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவை பகிரும் ஆரி, பிக்பாஸின் ஆட்டம் துவங்கிவிட்டதாக கருத்து தெரிவித்துள்ளார். 

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்று  வெளியான புதிய ப்ரமோவில் பேசும் இமான் அண்ணாச்சி, ஒரு நகைச்சுவை நடிகர் பிக்பாஸ் டைட்டிலை வெல்ல வேண்டும் என்று சொல்கிறார். உடனே போட்டியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய சலசலப்பு உருவாகிறது. 

அப்போது நிரூப் ஏதோ சொல்ல, அவரை அருகில் இருக்கும் சிபி கண்டிக்கிறார். உடனே கோபமடையும் நிரூப், இமான் அண்ணாச்சியிடம், ''உங்களைப் பார்த்து சிரிக்கக் கூடாது'' என்று கேட்க, 'சிரிக்கலாமே' என்கிறார் இமான் அண்ணாச்சி. உடனே 'எனக்கு சரியாகப்படவில்லை' என சொல்லும் சிபி, மற்றவர்களைப் பார்த்து ஏன் சிரிக்கிறீர்கள் ? என்று கூறி வேகமாக அங்கிருந்து எழுந்து செல்கிறார். நிரூப்பை அபிஷேக் ராஜா சமாதானம் செய்ய முயற்சிக்கிறார். 

Story image

அப்போது இந்த வீட்டில் சண்டை துவங்கவிருப்பதாக நமீதா மாரிமுத்து கூறுகிறார்.  இந்த ப்ரமோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிரும், பிக்பாஸ் சீசன் 4 டைட்டில் வின்னர் ஆரி, பிக்பாஸின் ஆட்டம் ஆரம்பம் என்று கருத்து தெரிவித்துள்ளார். இரண்டு நாட்களாக அமைதியாக சென்ற பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது போட்டியாளர்களுக்குள் எழுந்த சலசலப்பால் சூடுபிடிக்கத்துவங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.