இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் இந்த வாரம் எவிக்சனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போட்டியாளர்களை பிக்பாஸ் அறிவித்தார். 
இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் ?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புதிய ப்ரமோவில் இந்த வாரம் எவிக்சனுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள போட்டியாளர்களை பிக்பாஸ் அறிவித்தார். 

இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் எதிர்பாராதவிதமாக நமிதா சில காரணங்களால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.  தற்போது 17 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகும் போட்டியாளர்களை மற்ற போட்டியாளர்கள் நாமினேட் செய்ய வேண்டும். இந்த நிலையில் இன்று (அக்டோபர் 11) வெளியான ப்ரமோ வெளியாகியுள்ளது. 

அதில் இன்று வெளியான ப்ரமோவில் இந்த வார எவிக்சனுக்காக நாமினேட் செய்யப்பட்டவர்களின் பெயரை பிக்பாஸ் வாசிக்கிறார். அதில், நாதியா, நிரூப், இமான், இசைவாணி, பிரியங்கா, அபினய், அபிஷேக், அக்சரா என்று தெரிவிக்கிறார்.

இதனையடுத்து பிரியங்கா தவிர மற்ற போட்டியாளர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். தான் பிரபலமாக இருப்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவ்வளவு எளிதில் வெளியேற்றப்பட மாட்டோம் என்ற நம்பிக்கை பிரியங்காவிற்கு இருக்கலாம். இந்த நிலையில் ப்ரமோவை பகிர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற விரும்பும் போட்டியாளர்களை ரசிகர்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com