இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

இந்திய எல்லையில் ராணுவ வீரர்களுடன் நடிகர் அஜித்: வைரலாகும் புகைப்படம்

இந்திய எல்லையில் ராணுவ வீரர்களுடன் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

News image
Updated On :28 ஜனவரி 2024, 9:54 am IST

இந்திய எல்லையில் ராணுவ வீரர்களுடன் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள வலிமை படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு வெளியாகவிருக்கிறது. இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் இருந்து வேற மாரி பாடல் மற்றும் கிலிம்ப்ஸ் விடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. 

Story image

இந்தப் படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நடிகர் அஜித் பைக்கில் உலகம் சுற்றும் மாரல் யாஜர்லு என்பவரை சந்தித்து உலகப் பயணம் குறித்து ஆலோசனை கேட்டறிந்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வந்தன. இதனையடுத்து அஜித் பைக் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல் பரவியது.

Story image
Story image

இந்த நிலையில் இந்தியாவை பாகிஸ்தானையும் இணைக்கும் வாகா எல்லைக்கு நடிகர் அஜித் தனது பைக்கில் பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு ராணுவ வீரர்களுடன் உரையாடிய அவர் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மேலும் ராணுவ வீரர்களுடன் அவர் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.