உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதிக்கு வில்லனாகும் பிரபல நடிகர்

மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக ஃபகத் ஃபாசில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Published On :

மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக ஃபகத் ஃபாசில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்ணன் படத்துக்குப் பிறகு துருவ் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருப்பதாக தகவல் வெளியானது. கபடியை மையப்படுத்தி உருவாகவிருக்கும் இந்தப் படத்தை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கவிருப்பதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில் துருவ் படத்துக்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை மாரி செல்வராஜ் இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தில் வில்லனாக பிரபல மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான ஃபகத் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் மற்றும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ஃபகத் நடிக்கும் காட்சிகளைப் பார்க்க ரசிகர்களிடையே ஆவல் எழுந்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.