பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன?

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை...

News image
Updated On :9 ஆகஸ்ட் 2022, 11:22 am IST

தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் திரைக்கு வந்த மொத்தம் 10 திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ளன.

இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் கார்கி. இந்தப் படம் வருகின்ற ஆகஸ்ட் 12ஆம் தேதி சோனி லைவ் ஓடிடியில் வெளியாகிறது. அதேபோல்,  லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிப்பில் தெலுங்கு மற்றும் தமிழில் மொழிகளில் வெளியான தி வாரியர், ஆகஸ்ட் 11ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.

அமலா பால் தயாரிப்பில் முதல் முறையாக எடுக்கப்பட்டுள்ள கடாவர் திரைப்படம் நேரடியாக ஹாட்ஸ்டார் ஓடிடியில் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடப்படவுள்ளது.

தெலுங்கு மொழியில் திரைக்கு வந்த ஹேப்பி பர்த்டே ஆகஸ்ட் 8ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியிலும், தேங்க்யூ திரைப்படம் ஆகஸ்ட் 12-ல் அமேசான் ப்ரைமிலும், ஹல்லோ வோர்ல்டு ஆகஸ்ட் 12-ல் ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.

ஹிந்தியில் வெளியான ஓம் மற்றும் கன்னடத்தில் வெளியான விண்டோ சீட்
ஆகிய திரைப்படங்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகவுள்ளன.

ஹாலிவுட்டில் வெளியான ஐ எம் குரூட் திரைப்படம் ஹாட்ஸ்டாரிலும், டே ஷிப்ட் திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடியிலும் வெளியாகவுள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.