திகில் படமான டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.
இதையும் படிக்க | அடுத்தடுத்த நாள் வெளியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் 2 படங்கள்..
விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.