’டிமாண்டி காலனி 2’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

திகில் படமான டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.
’டிமாண்டி காலனி 2’ முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு

திகில் படமான டிமாண்டி காலனி 2 திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

திகில் கதையை மையமாக வைத்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் டிமாண்டி காலனி. இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய இந்தத் திரைப்படத்தில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார்.

விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படமானது வசூல்ரீதியாகவும் வெற்றி பெற்றது. 

இந்நிலையில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி - பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் உருவாகிவரும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com