பீஸ்ட் படத்துக்கு பிறகு நடிகர் விஜய் தமிழ், தெலுங்கில் உருவாகும் படத்தில் நடிக்கவிருக்கிறார். தோழா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமைான தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கவிருக்கிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறார்.
இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இந்த நிலையில் இந்தப் படத்தில் பிரபல தெலுங்கு கதாநாயகன் நானி முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் பரவி வருகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம்.
விஜய் நடித்துள்ள குஷி, திருப்பாச்சி போன்ற படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு நல்ல வரேற்பை பெற்றுள்ளன. மேலும் அவரது படங்களான துப்பாக்கி, நண்பன், மெர்சல், தெறி போன்ற பல படங்கள் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்ட்டு பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக துப்பாக்கி படத்தை தெலுங்கு ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தெலுங்கு பேசி அசத்தினார். மேலும் தெலுங்கில் முன்னணி கலைஞர்களான வம்சி, தில்ராஜு, இசையமைப்பாளர் தமன் ஆகியோர் விஜய் படத்தில் பணிபுரியவிருப்பதால் தெலுங்கிலும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க | தனுஷ் பட டிரெய்லரை வெளியிடுவாரா சிம்பு ?
நாயகியும் தெலுங்கு மற்றும் தமிழில் பிரபலமான நாயகி ஒருவரே நடிப்பார் என்று கூறப்படுகிறது. குறிப்பாக ராஷ்மிகா நடிப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது நானி நடிக்கவிருப்பதாக வெளியான தகவல் ஒருவேளை உண்மையானால் தமிழைப் போலவே தெலுங்கிலும் விஜய் பெரும்வெற்றியுடன் கால் பதிக்க இந்தப் படம் உதவும். நானி நடித்து சமீபத்தில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஷ்யாம் சிங்கா ராய் தமிழகத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.