ஆடவா் உலகக் கோப்பை ஹாக்கி: ஸ்பெயினை வீழ்த்தி ஜெர்மனி 4-வது முறை சாம்பியன்! தகவல் தொடா்புக்கு ஆபாச இணையதளங்களை பயன்படுத்தும் காஷ்மீா் பயங்கரவாதிகள்!ரூ. 47,750 கோடி வா்த்தக இலக்கு: இந்தியா - உஸ்பெகிஸ்தான் முடிவு! முதுநிலை நீட் தேர்வு: 2.63 லட்சம் போ் எழுதினா்! இரு மையங்களில் மறுதோ்வு நடத்த முடிவு! மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்று எஸ்சிஓ உச்சிமாநாடு: மோடி, புதின், ஷி ஜின்பிங் பங்கேற்புவெளிநாடுகளில் மருத்துவம் பயின்றோருக்கு தகுதிச்சான்று: நாளைமுதல் விண்ணப்பிக்கலாம்திமுகவில் 6 லட்சம் பதவிகளுக்கு உள்கட்சித் தேர்தல்ரஷியாவுக்கு பெட்ரோல் அதிகம் ஏற்றுமதி செய்யும் நாடானது இந்தியா

'இரவின் நிழல் சர்ச்சை' - ரசிகர்களிடம் மன்னிப்புக்கேட்ட பார்த்திபன்

இரவின் நிழல் பட நிகழ்வில் நாயகி பிரிகிடா தவறாக பேசியதாக சர்ச்சை உருவான நிலையில் இயக்குநர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டுள்ளார். 

Published On :1 பிப்ரவரி 2024, 3:20 pm IST

இரவின் நிழல் பட நிகழ்வில் நாயகி பிரிகிடா தவறாக பேசியதாக சர்ச்சை உருவான நிலையில் இயக்குநர் பார்த்திபன் மன்னிப்பு கேட்டுள்ளார். 

பார்த்திபன் தயாரித்து இயக்கி நடித்துள்ள 'இரவின் நிழல்' திரைப்படம் கடந்த ஜூலை 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றுவருகிறது. 

எது உலகின் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் ?

உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என விளம்பரப்படுத்தப்பட்ட இந்தத் திரைப்படம் கடந்த சில நாட்களாக பல சர்ச்சைகளை சந்தித்தது. 

சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன், கடந்த  2013 ஆம் ஆண்டு வெளியான ஈரானிய படமான ஃபிஷ் அண்ட் கேட் படம் தான் உலகின் நான் லீனியர் சிங்கிள் ஷாட் திரைப்படம் என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். 

இதனையடுத்து பார்த்திபன் மற்றும் ப்ளூ சட்டை மாறன் இடையே கருத்து மோதல் வலுத்தது. இந்த நிலையில் புதிய சர்ச்சையாக அந்தப் படத்தில் நாயகியாக நடித்த பிரிகிடா, சேரிக்கு சென்றால் அங்கு கெட்ட வார்த்தை மட்டும் தான் கேட்க முடியும் என பேசியது சர்ச்சையானது. 

Story image

மன்னிப்புக் கேட்ட பார்த்திபன்

பிரிகிடாவின் பேச்சுக்கு பலரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். இதன் ஒரு பகுதியாக பிரிகிடா தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டுள்ளார். இதுகுறித்து அவர் குறிப்பிட்டுள்ளதாவது, இரவின் நிழல் படத்தில் இடம் மாறும்போது மொழி மாறுகிறது என்பதை தெரிவிக்க முயற்சித்தேன். ஆனால் தவறான உதாரணத்தைக் கூறியதற்காக வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில், பிரிகிடா சார்பாக நானும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் மனக்காயம் அடைந்தவர்களிடம். 1989 ல் நடக்கும் கதையிது. 2022-ல் சேரி மக்களிடம் உள்ள மாற்றம், கடுமையான போரட்டத்தில் அவர்கள் பெற்ற கல்வியினால். என் படங்கள் பெரும்பாலும் சேரி மக்களை ஹீரோ ஆக்குவதே என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.