தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக தங்கள் சமூக வலைதளங்கள் மூலம் அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் இதுவரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இருவரும் கணவன், மனைவியாக பிரிந்தாலும் நண்பர்களாக தொடர்வோம் என தங்களது பிரிவு அறிவிப்பில் தெரிவித்திருந்தனர். அதற்கேற்ப ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 'பயணி' பாடலைப் பகிர்ந்த தனுஷ், ''தோழி ஐஸ்வர்யாவுக்கு வாழ்த்துகள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அங்கித் திவாரி இசையமைத்துள்ள இந்தப் பாடலை தமிழில் அனிருத் பாடியுள்ளார். இந்தப் பாடலை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக வெளியிட்டு தனது மகளுக்கு வாழ்த்து தெரிவித்துளளார். இந்தப் பாடல் தற்போது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.