
கார்த்தி நடிப்பில் வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு காரைப் பரிசளித்தார் தயாரிப்பாளர்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியானதால் கூடுதலாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
இந்தப் படம் இதுவரை ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையும் படிக்க | மீண்டும் பாலிவுட் செல்லும் ஜீவா
படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், வசூல் வெற்றியால் இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் லக்ஷ்மன் லான்சன் காரைப் பரிசாக வழங்கினார். நடிகர் கார்த்தி காரின் சாவியை இயக்குநரிடம் ஒப்படைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.