மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆஸ்கர் விழாவில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை

அகாதெமி அமைப்பின் விழாக்களில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :9 ஏப்ரல் 2022, 8:23 am

DIN

ஆஸ்கர் விருது விழாவில் நடிகர் கிறிஸ் ராக்கின் கன்னத்தில் அறைந்த காரணத்துக்காக அகாதெமி அமைப்பின் விழாக்களில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது.  விருது விழா நடைபெற்ற டால்பி திரையரங்கில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நடைபெற்றது.

இந்த விழாவில் தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித்தைக் கிண்டலடித்த நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக்கை மேடையில் ஏறி அறைந்தார் வில் ஸ்மித். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை அன்றைய தினம் அவர் வென்றார். கிங் ரிச்சர்ட் படத்தில் நடித்ததற்காக அந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது. 

அலோபீசியா பாதிப்பு காரணமாக தலைமுடி கொட்டி வந்ததால் மொட்டை அடித்திருந்தார் ஜாடா. இதுபற்றி பல பேட்டிகளில் அவர் கூறியுள்ளார். ஆனால் ஆஸ்கர் விருது விழா மேடையில், ஜி ஐ ஜேன் படத்தைக் குறிப்பிட்டு (1997-ல் வெளியான படம்) நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கிறிஸ் ராக், ஜாடாவைக் கிண்டலடித்தார். இதைக் கேட்டு கடுப்பான வில் ஸ்மித், மேடையிலேயே கிறிஸ் ராக்கை அறைந்து, இனிமேல் என் மனைவியின் பெயரை நீ கூறக்கூடாது என்று உரத்த குரலில் கூறினார். இதனால் ஆஸ்கர் விருது விழாவில் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு தனது செயலுக்கு மன்னிப்பு கோரினார் வில் ஸ்மித். 

Story image

இந்நிலையில் அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் & சயின்சஸ் அமைப்பின் நிர்வாகக் குழு, ஆஸ்கர் விருது விழா உள்ளிட்ட அகாதெமி அமைப்பின் விழாக்களில் கலந்துகொள்ள வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்துள்ளது. அகாதெமியின் குழுவில் இருந்து சமீபத்தில் வில் ஸ்மித் ராஜிநாமா செய்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்கர் விருது விழாவில் பங்கேற்க வில் ஸ்மித்துக்குத் தடை விதிக்கப்பட்டாலும் அவருடைய படங்கள் ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்படுவதிலோ அவர் ஆஸ்கர் விருதுகளை வெல்வதிலோ எவ்விதத் தடையும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து அகாதெமி அமைப்பின் முடிவை ஏற்றுக்கொள்வதாக வில் ஸ்மித் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.