சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

விஜய்யின் 'தளபதி 66'-ல் ராஷ்மிகாவுக்கு முன் நடிக்கவிருந்தது இவரா ? மாற்றத்துக்கு காரணம் ?

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தில் ராஷ்மிகாவுக்கு முன்னதாக நடிக்கவிருந்த நடிகை குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். 

Published On :6 பிப்ரவரி 2024, 6:15 pm IST

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதனை முன்னிட்டு பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டன. அந்த அளவுக்கு இந்தப் படத்தைக் காண ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது. 

பீஸ்ட் படம் இந்திய அளவில் வெளியாகவுள்ளதால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. பீஸ்ட் படத்தின் பாடல்களும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

தெலுங்கில் பீஸ்ட் படத்தை தெலுங்கை தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேசன்ஸ் சார்பாக வெளியிடுகிறார். இவர் நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பீஸ்ட் படம் தொடர்பாக தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, ''பூஜா திறமையான நடிகை. தளபதி 66 படத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டோம். ஆனால் அடுத்தடுத்து விஜய்யுடன் நடித்தால் நன்றாக இருக்காது என்று எங்களது முடிவை மாற்றிக்கொண்டோம்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.