இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

விஜய்யின் 'தளபதி 66'-ல் ராஷ்மிகாவுக்கு முன் நடிக்கவிருந்தது இவரா ? மாற்றத்துக்கு காரணம் ?

நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தில் ராஷ்மிகாவுக்கு முன்னதாக நடிக்கவிருந்த நடிகை குறித்து தயாரிப்பாளர் தில் ராஜு தெரிவித்துள்ளார். 

News image
Updated On :11 ஏப்ரல் 2022, 4:44 pm IST

நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' திரைப்படம் வருகிற 13 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. இதனை முன்னிட்டு பெரும்பாலான திரையரங்குகளில் பீஸ்ட் படத்தின் முதல் நாள் டிக்கெட்டுகள் விற்றுதீர்ந்துவிட்டன. அந்த அளவுக்கு இந்தப் படத்தைக் காண ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்துள்ளது. 

பீஸ்ட் படம் இந்திய அளவில் வெளியாகவுள்ளதால், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. பீஸ்ட் படத்தின் பாடல்களும் இந்திய அளவில் டிரெண்டிங்கில் இருக்கிறது. 

தெலுங்கில் பீஸ்ட் படத்தை தெலுங்கை தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேசன்ஸ் சார்பாக வெளியிடுகிறார். இவர் நடிகர் விஜய்யின் தளபதி 66 படத்தையும் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பீஸ்ட் படம் தொடர்பாக தயாரிப்பாளர் தில் ராஜூ, நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டோர் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய தயாரிப்பாளர் தில் ராஜு, ''பூஜா திறமையான நடிகை. தளபதி 66 படத்தில் அவரை நடிக்க வைக்க திட்டமிட்டோம். ஆனால் அடுத்தடுத்து விஜய்யுடன் நடித்தால் நன்றாக இருக்காது என்று எங்களது முடிவை மாற்றிக்கொண்டோம்'' என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.