பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல் பாடகி ஜானகி மறைவு: நடிகர்கள் ரஜினி, கமல் இரங்கல்! பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி காலமானார் வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்? வியத்நாம் படகு விபத்து: பழனியைச் சேர்ந்தவர் பலி! படகில் சென்ற தமிழர்கள் விவரம்!மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 பேர் பலி அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த் மீண்டுமா? ஆந்திரத்தில் பரவும் கரோனா-19! 2 பேர் பலியானதால் பதற்றம்!!வியட்நாமில் படகு கவிழ்ந்து விபத்து! 15 இந்தியர்கள் பலி எனத் தகவல்வயநாடு நிலச்சரிவில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்! நான் காந்தியோ நாயகனோ அல்ல! உண்ணாவிரதப் போராட்டத்தில் சோனம் வாங்சுக் போலிச் சான்றிதழ்கள்! 3,000 ஆசிரியர்கள் பணிநீக்கம்! வட்டியுடன் சம்பளத்தைத் திரும்பப்பெற முடிவு தமிழகத்துக்கு கூடுதலாக 100 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு!
/

''கேன்சர்னு தெரிஞ்சதும் 3 மணிநேரம் அழுதேன்': மீண்டுவந்த கதையைப் பகிர்ந்துகொண்ட சஞ்சய் தத்

புற்றுநோயிலிருந்து மீண்டுவந்த கதையை நடிகர் சஞ்சய் தத் பகிர்ந்துகொண்டார்.  

News image
Updated On :20 ஏப்ரல் 2022, 4:35 pm IST

நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்த 'கேஜிஎஃப் 2' படம் 6 நாட்களில் 600 கோடி ரூபாய் வசூலைப் பெற்று இந்திய அளவில் மிகப்பெரிய வெற்றியடைந்துள்ளது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துவருகிறது. 

இந்த நிலையில் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நடிகர் சஞ்சய் தத் பேட்டியளித்தார். அதில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டது தொடர்பாகவும், அதிலிருந்து மீண்டது தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் பேசியதாவது, ''எனக்கு புற்றுநோய் என தெரிந்ததும் நான் மூன்று மணி நேரம் அழுதேன். காரணம் நான் அப்பொழுது எனது மனைவி, குழந்தைகளின் வாழ்க்கை குறித்து சிந்தித்தேன். ஆனாலும் நான் என் வலிமையை இழக்க விரும்பவில்லை. 

என் முடியை இழந்துவிடுவேன் என்றார்கள். எனக்கு வாந்தி வரும் என்றார்கள். ஆனால் நான் எனக்கு எதுவும் ஆகாது. நான் முடியை இழக்க மாட்டேன். எனக்கு வாந்தி வராது. நான் படுக்கையில் விழுந்து கிடக்கமாட்டேன் என்றேன். 

கீமோதெரபி சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகு நான் ஒரு மணிநேம் உடற்பயிற்சி செய்தேன். ஒவ்வொருமுறையும் நான் அப்படி செய்தேன். கீமோதெரபி சிகிச்சைக்காக நான் துபை சென்றேன் சிகிச்சை முடிந்ததும் 3 மணி நேரம் பேன்ட்மிட்டன் விளையாடினேன். 

முதலில் விசா கிடைக்காததால் ஹிருத்திக் ரோஷனின் தந்தையின் அறிவுரையின் பேரில் இந்தியாவிலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டேன். கீமோதெரபிக்கு மட்டும் துபை சென்றுவந்தேன். தற்போது புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமாகியிருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.