அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

சூர்யா படத்தைக் காண விருப்பம் தெரிவித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் - சூர்யா நெகிழ்ச்சி

நடிகர் சூர்யா தயாரித்துள்ள ஓ மை டாக் படத்தைக் காண தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 4:36 pm IST

சூர்யா தனது 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரித்துள்ள ஓ மை டாக் திரைப்படம் இன்று (ஏப்ரல் 21) நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. 

இந்தப் படத்தில் தாத்தா விஜயகுமார், அப்பா அருண் விஜய், மகன் ஆர்னவ் விஜய் என மூன்று தலைமுறையினர் இணைந்து நடித்துள்ளனர். இந்தப் படத்தை சரோவ் சண்முகம் இயக்கியுள்ளார். குழந்தைகளுக்கான படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. 

Story image

இந்தப் படம் குறித்து முன்னாள் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஓ மை டாக் படத்தைக் காண ஆவலாக இருப்பதாக கருத்துதெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், செல்லப் பிராணிகளின் நலம் விரும்பியாக இந்தப் படத்தைக் காண ஆவலாக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

அவருக்கு பதிலளித்த நடிகர் சூர்யா, ''நன்றி சார். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். உங்கள் இந்தியா ரோட்ஸ்க்கு இந்தப் படம் மிகவும் என உறுதியாக இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.