கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

அடுத்த பட அறிவிப்பு வரும் வரை... லோகேஷ் கனராஜ் பகிர்ந்த முக்கிய தகவல்

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். 

Published On :

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார். 

கமல்ஹாசன், பகத் பாசில், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்து கடந்த ஜூன் 3 ஆம் தேதி வெளியான விக்ரம் திரைப்படம் பெரும் வெற்றியை பதிவு செய்தது. 50 நாட்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய இந்தப் படம் ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. 

இந்தப் படம் சுமார் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக இயக்கும் தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் சமூக வலைதளங்களிலிருந்து தற்காலிகமாக விலகுவதாகவும் அடுத்த பட அறிவிப்பு வெளியாகும்போது மீண்டும் சமூக வலைதளங்களில் இணையுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை செவன் ஸ்கீரின் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரிக்கிறார். அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் பகத் பாசில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாராம். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.