தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

தனுஷின் நடிப்பு குறித்து கரீனா கபூர் கருத்து - வைரலாகும் விடியோ

தனுஷின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கரீனா கபூரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Published On :

தனுஷின் நடிப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள கரீனா கபூரின் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை ஆடுகளம், அசுரன் படங்களுக்காக இரண்டுமுறை பெற்றுள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், ஹிந்தியில் ராஞ்சனா, ஷமிதாப், அட்ராங்கி ரே, ஆங்கிலத்தில் தி கிரே மேன் என உலக அளவில் அறியப்பட்ட நடிகராக இருக்கிறார். 

தற்போது வாத்தி படத்தின் மூலம் தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கிறார். இந்திய அளவில் திரையுலக பிரபலங்கள் தமிழ் படங்கள் குறித்து பேசும்போதெல்லாம் தனுஷின் நடிப்பு குறித்து பாராட்டத் தவறுவதில்லை. 

அந்த வகையில் நடிகை கரீனா கபூர், தனுஷ் மிகச்சிறந்த நடிகர், ஒவ்வொரு முறையும் அவரது நடிப்பை பார்க்கும்போது வேற லெவலில் இருக்கும். என்று குறிப்பிட்டுள்ளார். 

கரீனா கபூரின் கணவரான சயீப் அலிகானின் மூத்த மகளான சாரா அலிகானுடன் அட்ராங்கி ரே படத்தில் தனுஷ் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.