நடிகர் அஜித்தின் ரசிகர்கள் 100 அடி ஆழத்தில் கடலுக்கு அடியே பேனர் வைத்துள்ளனர்.
நடிகர் அஜத் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தை கலைத்துவிட்டார். தன் படங்கள் வெளியாகும்போது மட்டும் ரசிகர்கள் வந்து பார்த்தால் போதும் என்பது அவரது நிலைப்பாடு.
கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னை தல என்றோ, அல்டிமேட் ஸ்டார் என்றோ அழைக்க வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டார். இருப்பினும் அவரது ரசிகர்கள் அடங்குவதாய் இல்லை.
சமீபத்தில் துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்துகொள்ள நடிகர் அஜித் திருச்சி வந்தபோது பெரும் கூட்டம் கூடியது. ரசிகர்கள் முன் தோன்றி கையசைத்து அவர்களை அமைதிப்படுத்தினார்.
இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் கடலுக்கு அடியில் 100 அடி ஆழத்தில் அவரது பேனரை வைத்து அசத்தியுள்ளனர். நடிகர் அஜித் திரையுலகில் அடியெடுத்து வைத்து 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அதனைக் கொண்டாடும் விதமாக புதுச்சேரி ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர். தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.