மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

35 ஆண்டுகளுக்கு பிறகு கமலுடன் இந்தியன் 2வில் இணையும் நடிகர்

நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் நடிகர் குறித்த தகவல் கிடைத்துள்ளது.  

Published On :

நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தியன் 2 படத்தில் கமலுடன் இணையும் நடிகர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 

விபத்து உள்ளிட்ட பல காரணங்களால் தடைபட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கவுள்ளது. இந்தப் படத்தில் நடித்துவந்த நடிகர்கள் விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகியோர் யாரும் எதிர்பாராதவிதமாக மறைந்துவிட்டனர்.

இந்த நிலையில் நடிகர் விவேக்கிற்கு பதிலாக நவரச நாயகன் கார்த்திக்கும் நெடுமுடி வேணுவிற்கு பதிலாக நந்து பொதுவலும் நடிப்பது உறுதியாகியுள்ளது.

திருமணமாகி குழந்தை பிறந்துவிட்டதால் காஜல் அகர்வால் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்தியன் 2 வில் நடிப்பதை காஜல் உறுதி செய்துள்ளார்.  

Story image

இந்த நிலையில் இந்தப் படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறாராம். கமல்ஹாசன் நாயகனாக நடித்த காக்கி சட்டை, விக்ரம் படங்களில் சத்யராஜ் வில்லனாக மிரட்டியிருப்பார். இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இந்தப் படத்தில் கமலுடன் சத்யராஜ் இணையவிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 

இந்தியன் 2 படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிபெற்றதன் காரணமாக இந்தியன் 2 படத்தை மீண்டும் துவங்குவது எளிதாகியுள்ளது. உதயநிதி ஸ்டாலின் இந்தப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.