டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

'ஷங்கர் சார்.. அதிதியை காதலிக்கிறேன்’: பிரபல நகைச்சுவை நடிகர்

விருமன் திரைப்படம் பார்த்த பிறகு நடிகை அதிதியைக் காதலிப்பதாக பிரபல நடிகர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

News image

அதிதி

Updated On :12 ஆகஸ்ட் 2022, 12:38 pm IST

விருமன் திரைப்படம் பார்த்த பிறகு நடிகை அதிதியைக் காதலிப்பதாக பிரபல நடிகர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படம் இன்று வெளியானது. பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைக்கு வந்துள்ளதால் பல இடங்களிலும் அதிகாலைக் காட்சியில் ரசிகர்கள் படம் பார்த்தனர். 

இப்படத்தில் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நாயகியாக அறிமுகமாகியுள்ளார்.

இந்நிலையில், திரைப்படத்தின் மீதான விமர்சனத்தைப் பெறுவதற்கு யூடியூப் சேனல்கள் சென்னையில் உள்ள தனியார் திரையரங்கம் ஒன்றில் காத்திருந்தபோது படம் முடிந்த வெளியே வந்த பிரபல நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் ‘பிரமாண்ட இயக்குநரின் மகளைப் பார்க்கத் தான் வந்தேன். மாமனார் ஷங்கர் சார்... அதிதியைக் காதலிக்கிறேன். நீங்க பெரிய இடம். நான் ஏழை. திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் கமிஷ்னர் அலுவலகம் செல்வேன்’ எனப் பதாகை ஒன்றைக் காட்டி நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.

கூல் சுரேஷ்

கூல் சுரேஷ்

யூடியூப் திரை விமர்சனங்களில் கூல் சுரேஷ் பிரபலம் என்பதால் சமீப காலமாக வெளியாகும் அனைத்துப் படத்திற்கும் அவர் நகைச்சுவையாக விமர்சனம் செய்வது டிரெண்ட் ஆகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.