தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

உடல் உறுப்புகளை தானம் செய்கிறேன்: கணவருக்காக மீனா உருக்கம்

நடிகை மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். தனது கணவருக்கு உடல் உறுப்பு தானமாக கிடைத்திருந்தால், எனது வாழ்க்கை மாறியிருக்கும் என உருக்கம் படத் தெரிவித்துள்ளார்.

News image

மீனா (கோப்புப் படம்)

Updated On :15 ஆகஸ்ட் 2022, 10:22 pm IST

நடிகை மீனா தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்துள்ளார். தனது கணவருக்கு உடல் உறுப்பு தானமாக கிடைத்திருந்தால், எனது வாழ்க்கை மாறியிருக்கும் என உருக்கம் படத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த மீனா, பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகர் என்பவரை கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இதனிடையே நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த மீனாவின் கணவர் வித்யாசாகர், கடந்த ஜூன் 28ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், உடல் உறுப்பு தானம் குறித்து நடிகை மீனா வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ''உயிரைக் காப்பாற்றக்கூடிய சிறந்த விஷயம்தான் உடல் உறுப்பு தானம். என் கணவர் வித்யாசாகருக்கு உடல் உறுப்பு தானமாக கிடைத்திருந்தால், எனது வாழ்க்கையே மாறியிருக்கும். ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்வதால் 8 உயிர்கள் வரைக்கும் காப்பாற்ற முடியும். இது உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களுக்கும், பலன் அடைபவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் இடையிலான விஷயம் மட்டும் அல்ல. சம்பந்தப்பட்ட நபர்களின் உறவினர்கள், நண்பர்கள் போன்றவர்களிடமும் பெரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும். இதனால், நான் என் உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கு முடிவு செய்துள்ளேன்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.