தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்துக்கு இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தைப் பதிவு செய்துள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் படங்களுக்கு பிறகு தனுஷ் - இயக்குநர் மித்ரன் ஜவகர் திருச்சிற்றம்பலம் படத்துக்காக இணைந்துள்ளனர்.
மேலும் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணி இந்தப் படத்துக்காக இணைந்துள்ளது படத்துக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.
தனுஷுடன் நித்யா மேனன், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா, ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படம் முதல் நாளில் ரூ.7 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் திருச்சிற்றம்பலம் படம் குறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, ''நீண்ட நாட்களுக்கு பிறகு இதயத்துக்கு நெருக்கமான படம். இந்த அப்பா மகன் கதை அன்பை தூண்டுவதோடு, கண்ணீரையும் வரவழைக்கிறது. இந்த அனுபவத்துக்கு நன்றி. மிகவும் மகிழ்ச்சியான படைப்பு. தனுஷ் சார் மற்றும் திருச்சிற்றம்பலம் குழுவினருக்கு வாழ்த்துகள்'' என்று தெரிவித்துள்ளார்.
A heartwarming film after a long while, this father son tale evokes fond love and moves one to tears. Thank you for this experience. It is a delightful work @dhanushkraja sir.
â Mari Selvaraj (@mari_selvaraj) August 18, 2022
Best wishes and love to the team of #Thiruchitrambalam https://t.co/m30YbPepNq
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மழைக்காலத்தில் வரும் நோய்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: மருத்துவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

ஆயுஷ்மான் பாரத் எண்ம இயக்க மாவட்ட அளவிலான செயற்குழுக் கூட்டம்: தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநா் பங்கேற்பு

‘ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஸ்டாா்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையை ஐந்து மடங்காக உயா்த்த இலக்கு’

ஜூலை ஓய்வூதியம் கிடைக்காமல் தவிக்கும் பிஎஃப் ஓய்வூதியர்கள்! ‘பழுதுபாா்ப்பு’ பெயரில் முடங்கிய பிஎஃப் இணைய சேவை முடக்கம் நீடிக்கிறது!
விடியோக்கள்

சர்தார் 2 டீசர்!



