கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

''கபாலி'யால் மன உளைச்சலில் இருந்தேன்....'' - இயக்குநர் பா.ரஞ்சித் தகவல்

கபாலி படத்தால் மன உளைச்சலில் இருந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :23 ஆகஸ்ட் 2022, 1:10 pm IST

கபாலி படத்தால் மன உளைச்சலில் இருந்ததாக இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை இயக்கியுள்ளார். தென்மா இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் நேற்று (ஆகஸ்ட் 22) வெளியானது. இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சசி, வெங்கட் பிரபு தயாரிப்பாளர்கள் ஞானவேல் ராஜா, தாணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

விழாவில் பேசிய பா.ரஞ்சித், தயாரிப்பாளர் தாணு பற்றி குறிப்பிடும்போது, கபாலி படம் கமர்ஷியல் ரீதியாக வெற்றிபெற்றது. தயாரிப்பாளர் தாணு எனக்கு எந்த நெருக்கடியும் கொடுக்காமல் நன்றாக பார்த்துக்கொண்டார். ஆனால் அந்தப் படம் வெளியாகும்போது திரையுலகில் எதிர்மறை விமர்சனங்களே இருந்தது. அதன் காரணமாக நான் மன உளைச்சலில் இருந்தேன். 

அப்போது கபாலி படத்துக்கு கிடைத்த வசூல் விவரங்களை எனக்கு தாணு காட்டி, 'உன் படம் பெரிய ஹிட்டு' என நம்பிக்கை கொடுத்தார். அதனை என்னால் என்றும் மறக்கமுடியாது என்று தெரிவித்தார். 

நட்சத்திரம் நகர்கிறது படம் வருகிற ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. காதல் குறித்து விவாதங்களை இந்த சமூகத்தில் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.