இந்தியன் 2 சர்ச்சை குறித்து இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார்.
இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்து உள்ளிட்ட எதிர்பாராத நிகழ்வுகளால் பாதியில் நின்றதன் காரணமாக ராம் சரண் படத்தை இயக்குநர் ஷங்கர் துவங்கினார். ஆர்சி15 என்று அழைக்கப்பட்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தது.
இந்தப் படத்தை வாரிசு படத்தை தயாரிக்கும் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேசன்ஸ் சார்பாக தயாரிக்கிறார். முதன்முறையாக இயக்குநர் ஷங்கர் படத்துக்கு தமன் இசையமைக்க, கியாரா அத்வானி நாயகியாக நடிக்கிறார்.
இதையும் படிக்க | ''தாய் கிழவினு சொல்லாதீங்க'' - நித்யா மேனன் வேண்டுகோள்
ஆர்சி15 பட அப்டேட் எதுவும் வெளியாகாததால் ராம்சரண் ரசிகர்கள் கவலையில் இருந்தனர். இதற்கிடையே இந்தியன் 2 படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியது. இதன் காரணமாக ராம் சரண் படம் மேலும் தாமதமாகலாம் என சர்ச்சை உருவானது.
இதற்கு இயக்குநர் ஷங்கர் விளக்கமளித்துள்ளார். அதில், இந்தியன் 2 மற்றும் ஆர்சி15 படங்கள் ஒரே நேரத்தில் படமாக்கப்படவிருக்கின்றன. செப்டம்பர் முதல் வாரத்தில் ஆர்சி 15 படப்பிடிப்பை ஹைதரபாத் மற்றும் விசாகபட்டணத்தில் நடத்த தயாராக இருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.