‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிப்பில் வெளியான ‘பென்சில்’ திரைப்படத்தின் இயக்குநர் மணி நாகராஜ் மாரடைப்பு காரணமாக இன்று உயிரிழந்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ‘பென்சில்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, மணி நாகராஜ் நீயா நானா கோபிநாத்தை வைத்து இயக்கிய ‘வாசுவின் கர்ப்பிணிகள்’ திரைப்படம் அடுத்தாண்டு வெளியாக இருந்தது.
இந்நிலையில், இன்று மாரடைப்பால் அவர் உயிரிழந்தார்.