கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

தென்னிந்திய படங்களில் கதை இருக்கு, ஆனா.... - ஹிந்தி திரையுலகை விமர்சித்த அனுபம் கேர்

ஹிந்தி படங்கள் மற்றும் தென்னிந்திய படங்களை நடிகர் அனுபம் கேர் ஒப்பிட்டு பேசியது வைரலாகி வருகிறது. 

Published On :

ஹிந்தி படங்கள் மற்றும் தென்னிந்திய படங்கள் குறித்து நடிகர் அனுபம் கெர் பேசியது வைரலாகி வருகிறது. 

ஹிந்தி நடிகர் அனுபம் கெர் தமிழில் விஐபி, லிட்டில் ஜான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்து சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் ஃபைல்ஸ் மற்றும் கார்த்திகேயா 2 படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன. 

தென்னிந்திய படங்களா? ஹிந்தி படங்களா ? என பெரும் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் நடிகர் அனுபம் கெர் ஒரு பேட்டியில் இதுகுறித்து விரிவாக பேசியுள்ளார். அவர் பேசியதாவது, சிறந்தவைகள் கூட்டு முயற்சியால் உருவாகும். இதனை நான் தெலுங்கு படங்களில் பணியாற்றும்போது கற்றுக்கொண்டேன். 

இப்பொழுது ஒரு தெலுங்கு படத்தில் நடித்திருக்கிறேன். தமிழிலும் ஏற்கனவே நடித்திருக்கிறேன். மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறேன். ஆங்கிலப் படங்கள் போல அவர்கள் செய்வதில்லை. அவர்கள் படங்களில் கதை சொல்கிறார்கள். ஆனால் நாம் நட்சத்திரங்களை விற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

சமீப காலமாக தென்னிந்திய படங்கள் வட இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்றுவருகின்றன. பாகுபலி, புஷ்பா, ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் ஹிந்தியில் பெரும் வெற்றிபெற்றன. தற்போது தெலுங்கு படமான கார்த்திகேயா 2 அங்கே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. அந்தப் படத்துடன் வெளியான ஆமிர் கானின் லால் சிங் சத்தா, அக்ஷய் குமாரின் ரக்சா பந்தன் போன்ற படங்கள் போதிய வரவேற்பை பெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.