16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

காதலியைக் கரம்பிடிக்கும் விஜய் டிவி புகழ் - திருமண தேதி அறிவிப்பு

விஜய் டிவி புகழ் தனது திருமண தேதியை அறிவித்துள்ள நிலையில் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

Published On :

விஜய் டிவி புகழ் தனது திருமண தேதியை அறிவித்துள்ள நிலையில் பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

நகைச்சுவை நடிகரான விஜய் டிவி புகழ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக கலக்கினார். இதன் மூலம் அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன. சமீபத்தில் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சிவகார்த்திகேயன் கூட இதனைக் குறிப்பிட்டு புகழைப் பாராட்டினார். 

புகழ் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள 'ஆகஸ்ட் 16, 1947', சந்தானத்தின் 'ஏஜெண்ட் கண்ணாயிரம்' போன்ற படங்கள் வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளன. தற்போது 'ஜூ கீப்பர்' என்ற படத்தில் ஹீரோவாக நடித்துவருகிறார். 

கோயம்புத்தூரை சேர்ந்த பென்ஸியாவை காதலித்துவருவதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் புகழ் அறிவித்தார். இதனையடுத்து அந்நிகழ்ச்சியில் புகழ் பெண்களுடன் பேசினால் உடனடியாக டிஜே 'கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு...' என்ற பாடலை ஒலிக்கவிடுவார். உடனடியாக புகழ் சுதாரித்துக்கொள்வதுபோல ரியாக்சன் கொடுப்பார். இது ரசிகர்களுக்கு குபீர் சிரிப்பை வரவழைத்தது.

இந்த நிலையில் புகழ் தனது நீண்டநாள் காதலி பென்ஸியாவை வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி திருமணம் செய்துகொள்ளவிருக்கிறார். இதனையடுத்து பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.