குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நடிகையின் காலுக்கு முத்தம்: அதிர்ச்சி விளக்கம் கொடுத்த பிரபல இயக்குநர்!

நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில்  இயக்குநர் ராம்கோபால் வர்மா கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

News image
Updated On :12 டிசம்பர் 2022, 4:11 pm IST

நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில்  இயக்குநர் ராம்கோபால் வர்மா கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படத்தை இயக்குவார். இவர் கரோனா காலத்தில் 18+ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டு பிரபலமானார்.

அவர் இயக்கிய படத்தில் அதிகமான ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றச்சாட்டுக்கு உள்ளானார். ஆனாலும் அவர், எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களையே எடுத்து வருகிறார்.

தற்போது ராம்கோபால் வர்மா, 'டேஞ்சரஸ்' எனும் இரு பெண்கள் காதலிக்கும் லெஸ்பியன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில், 'டேஞ்சரஸ்' படத்தை விளம்பரப்படுத்தும் விடியோவில், நடிகை அஷு ரெட்டியின் காலில் முத்தமிடும் காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு சமூக வலைதளங்களிலில் பலர் கேலி செய்துவந்தனர்.

இதற்கு சுட்டுரையில் பதில் அளித்த ராம்கோபால் வர்மா, நடிகை அப்சரா ராணி மீது நாய் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நடிகை அஷுரெட்டியின் காலடியில் அமர்ந்திருந்தபோது அப்சரா ராணியின் நாய் தான் நினைவுக்கு வந்தது என்றும், காலுக்கு முத்தம் கொடுப்பதை அப்சராவின் நாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றும்  பதிவிட்டுள்ளார்.

இந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு விளக்கமா என்று அதிர்ந்துபோய் உள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.