நடிகையின் காலுக்கு முத்தம் கொடுத்த விவகாரத்தில் இயக்குநர் ராம்கோபால் வர்மா கொடுத்த விளக்கம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா, வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு படத்தை இயக்குவார். இவர் கரோனா காலத்தில் 18+ திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்டு பிரபலமானார்.
அவர் இயக்கிய படத்தில் அதிகமான ஆபாசம் இருப்பதாகக்கூறி குற்றச்சாட்டுக்கு உள்ளானார். ஆனாலும் அவர், எதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய படங்களையே எடுத்து வருகிறார்.
தற்போது ராம்கோபால் வர்மா, 'டேஞ்சரஸ்' எனும் இரு பெண்கள் காதலிக்கும் லெஸ்பியன் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியானது.
இந்நிலையில், 'டேஞ்சரஸ்' படத்தை விளம்பரப்படுத்தும் விடியோவில், நடிகை அஷு ரெட்டியின் காலில் முத்தமிடும் காட்சியை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதற்கு சமூக வலைதளங்களிலில் பலர் கேலி செய்துவந்தனர்.
இதற்கு சுட்டுரையில் பதில் அளித்த ராம்கோபால் வர்மா, நடிகை அப்சரா ராணி மீது நாய் அமர்ந்து இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, நடிகை அஷுரெட்டியின் காலடியில் அமர்ந்திருந்தபோது அப்சரா ராணியின் நாய் தான் நினைவுக்கு வந்தது என்றும், காலுக்கு முத்தம் கொடுப்பதை அப்சராவின் நாயிடம் இருந்து கற்றுக்கொண்டேன் என்றும் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: ஜேஇஇ முதல்நிலைத் தேர்வு தேதி விரைவில்
இந்த விளக்கத்தை பார்த்த ரசிகர்கள், இப்படி ஒரு விளக்கமா என்று அதிர்ந்துபோய் உள்ளனர்.