பினராயி விஜயன் மீது வழக்குப்பதிவு? சட்ட ஆலோசனைக்குப் பின் முடிவு - கேரள முதல்வா்பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20%-க்கு மேல் அதிகரிக்க அரசு முயற்சி- பிரதமரின் ஆலோசகா் தருண் கபூா் 100 டாலரைக் கடந்தது கச்சா எண்ணெய் விலை: எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படும் அபாயம் தமிழகம் உள்பட 5 மாநில பேரவைத் தோ்தல்: பாஜக பெற்ற நன்கொடை ரூ.1,473 கோடி - காங்கிரஸை விட 7 மடங்கு அதிகம் முதல்வா் விஜய் இன்று லண்டன் பயணம்ஈரானின் 5 எண்ணெய் கப்பல்களை மூழ்கடித்தது அமெரிக்கா- பதிலடியாக 20 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இந்திய சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த அஜித்குமார் 

உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித் குமார் இந்தியாவில் தனது வாகனப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். 

Published On :

உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நடிகர் அஜித் குமார் இந்தியாவில் தனது வாகனப் பயணத்தை நிறைவு செய்துள்ளார். 

நடிகர் அஜித்குமார் திரைத்துறையைக் கடந்து துப்பாக்கிச் சுடுதல், மோட்டார் பந்தயம், சிறிய வகையிலான ஹெலிகாப்டர் உருவாக்கம் என பலவற்றில் தீவிரமான ஆர்வம் கொண்டவராக உள்ளார். இவற்றில் சமீபத்தில் இணைந்தது வாகனப் பயணம். 

கடந்த சில மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் நடிகர் அஜித்குமார் பைக் பயணம் மேற்கொண்டார். அவரது பைக் பயணத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில் துணிவு திரைப்படத்தின் இறுதிகட்டப் பணிகளுக்காக திரும்பிய நடிகர் அஜித்குமார் அதனை நிறைவு செய்து மீண்டும் பைக் பயணத்தில் ஈடுபட்டார். 

தற்போது அவர் உலக சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக இந்தியாவில் தனது பைக் பயணத்தை நிறைவு செய்துள்ளதாக அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். 

மேலும் அவரது புகைப்படமும் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை அவரது ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.