அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

ரஜினியும் மகளும், ஏ.ஆர்.ரஹ்மானும் மகனும்! வைரலாகும் குடும்ப செல்ஃபி

ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் தங்களது வாரிசுகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

News image
Updated On :16 டிசம்பர் 2022, 4:11 pm IST


ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தங்களது வாரிசுகளுடன் எடுத்துக்கொண்ட செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிப்பில் 'லால் சலாம்' திரைப்படம் உருவாகி வருகிறது. லைக்கா நிறுவனம் தயாரிப்பில், பிரமாண்ட படைப்பாக உருவாகும் இந்த படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசைமைக்கிறார். 

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடன் படத்திற்கு பாடல்கள் அமைக்கும்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஈடுபட்டு வருகிறார். 

இதனிடையே ரஜினியும் அவரது மகள் ஐஸ்வர்யாவும் திருமலையில் நேற்று சாமி தரிசனம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ரேணிகுண்டா சென்று, அங்கிருந்து விமானம் மூலம் கடப்பா சென்றனர்.

அவர்களைத் தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் கடப்பாவுக்குச் சென்றார். அங்கு ரஜினிகாந்துடன் அமீன்பீர் தர்காவிற்குச் சென்று ஏ.ஆர். ரஹ்மான் வழிபாடு செய்தார்.

Story image

இந்நிலையில், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான், அவரின் மகன் ஏ.ஆர். அமீன் ஆகிய நான்கு பேரும் ஒன்றாக செல்ஃபி எடுத்துக்கொண்டனர். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.