விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் டிஆர்பி பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது.
வார நாள்களில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர்
அண்ணன் தம்பிகள் 4 பேரைச் சுற்றி அமையும் கதைக்களம் கொண்டது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தவகையில் இரவு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் கிராமத்துப் பின்னணியில் கதைக்களம் அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.

சமீபத்தில் ஒளிபரப்பாகும் சின்னத் திரை தொடர்களில் கிராமத்தைப் பின்னணியாக வைத்து திரைக்கதை அமைவது பெருமளவு குறைந்துள்ளது. இதனால், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது.
சிவ சேகர், டேவிட் சார்லி ஆகியோர் இயக்கத்தில் பிரியா தம்பி திரைக்கதையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் உருவாகி வருகிறது. சகோதரர்கள் 4 பேர் மற்றும் அவர்களுக்கு வரும் மனைவிகள் ஆகியோரே பிரதான கதாபாத்திரங்கள். சுஜிதா, ஸ்டாலின், குமரன் தங்கராஜன், விஜே தீபிகா, ஷீலா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

முல்லை பாத்திரத்தில் நடித்த விஜே சித்ரா மறைவு இந்த தொடருக்கு பெரும் பின்னடைவு. எனினும் இந்த தொடர் விமர்சன ரீதியாக பலரிடம் சென்று சேர்ந்தது. இதில் நடித்து வரும் பாத்திரங்களும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளதால், இந்த தொடர் சலிப்பில்லாமல் நான்காவது ஆண்டாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!

அண்ணா பல்கலைக்கழகத்ததில் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மிஸ்பண்ணிடாதீங்க... பிஎஸ்என்எல் நிறுவனத்தில் ஜூனியர் டெலிகாம் அதிகாரி பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு!

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 15 2026) 12 ராசிகளுக்கும்! கடக ராசிக்கு வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



