மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

உலகில் மிக பிரபல பைக்கை வாங்கிய இயக்குநர் வெற்றிமாறன் - விலை இவ்வளவா?

உலகில் மிக பிரபல பைக்கை இயக்குநர் வெற்றிமாறன் வாங்கியுள்ளார்.  

News image
Updated On :14 பிப்ரவரி 2022, 5:49 pm IST

இயக்குநர் வெற்றிமாறன் பிஎம்டபுள்யூ ஆர் நைன் டி ஸ்கிராம்பிளர் என்ற பைக்கை வாங்கியுள்ளார். இந்த பைக்கின் விலை ரூ. 19 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த பைக் 1170 சிசி இஞ்சின் கொண்டது. 

தற்போது பைக்குடன் வெற்றமாறன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் வெற்றிமாறனின் பொல்லாதவன் திரைப்படம் பல்சர் என்ற பைக்கின் மீது ஒரு இளைஞரின் காதலை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Story image

வெற்றிமாறன் தற்போது ஜெயகாந்தனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் சூரி நாயகனாக நடிக்க, விஜய் சேதுபதி, கௌதம் மேனன் உள்ளிட்டோர் முதன்மை வேடங்களில் நடித்து வருகின்றனர். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்து வருகிறது. 

மேலும் 9 வருடங்களுக்கு பிறகு இயக்குநர் அமீர் இயக்கும் இறைவன் மிகப்பெரியவன் படத்துக்கும் வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.