நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த மாதம் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருவரின் பிரிவுக்கான காரணங்கள் என பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனிப் பாடல் ஒன்றை இயக்கவிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் வெளியானது. இந்த நிலையில் தமிழில் இந்தப் பாடலை அனிருத் பாடவிருக்கிறார். அதே போல தெலுங்கில், சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த்தும் பாடவிருக்கின்றனர்.
இதையும் படிக்க | கவர்ச்சி படங்களைப் பகிர்ந்து சமூக வலைதளங்களை சூடேற்றிய மீரா ஜாஸ்மீன்
அங்கித் திவாரி என்பவர் இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார். பே ஃபிலிம்ஸ் இந்த விடியோவை தயாரித்துள்ளது. விரவைல் இந்தப் பாடல் வெளியாகவுள்ளது. இதன் ஒரு பகுதியாக செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி, ஐஸ்வர்யாவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.