தெலுங்கில் பிரபல நடிகர் மோகன் பாபு நடிப்பில் சன் ஆஃப் இந்தியா என்ற படம் வெளியாகியிருந்தது. இந்தப் படம் குறித்து மோகன் பாபுவை விமர்சித்தும், கிண்டலடித்தும் மீம்ஸ்களும் பதிவுகளும் வைரலாகின. அவற்றில் பெரும்பாலானவை தனிப்பட்ட முறையில் மோகன்பாபுவை விமர்சிக்கும் விதமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மோகன் பாபுவின் மகனும் நடிகருமான விஷ்ணு மஞ்சு சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில், மோகன் பாபு பற்றியும், விஷ்ணு மஞ்சு பற்றியும் கிண்டலடித்து பதிவுகளும் மீம்ஸ்களும் பரவி வருகின்றன.
இதையும் படிக்க | 'வலிமை' படம் பார்க்க வந்த நடிகையை சூழ்ந்துகொண்ட ரசிகர்கள்
அவை குறிப்பிட்ட எல்லை வரை இருந்தால் நாங்கள் கண்டுகொள்வதில்லை. ஆனால் நிறைய பதிவுகள் எல்லை மீறியதாக இருக்கின்றன. இவை சைபர் குற்றத்தின் கீழ் வரும்.
எங்களை குறித்து விடியோக்கள், பதிவுகள், மீம்ஸ்கள் ஆகியவற்றை பதிவிடுபவர்கள் மீது வழக்கு தொடரவிருக்கிறோம். மேலும் ரூ.10 கோடி வரை நஷ்ட ஈடு கேட்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.