நடிகை சமந்தா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிலிருந்து தன் விவாகரத்துப் பதிவை நீக்கியுள்ளார்.
2017 ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்ட நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த அக்டோபர் மாதம் பிரிவதாகக் கூறியதுடன் இருதரப்பிலும் விவாகரத்து குறித்து அறிவிப்பை வெளியிட்டனர்.
இவர்களின் விவாகரத்திற்கு முன்பே இருவரது பிரிவு குறித்து சில ஊடகங்கள் வதந்திகளை பரப்பின.
பின் விவாகரத்து என்பது வலி நிறைந்தது. என்னை அதில் இருந்து வெளியே வர அனுமதியங்கள் என சமந்தாவும் கோரிக்கைவிடுத்திருந்தார். இருப்பினும் வதந்திகள் தொடர்ந்தன.
இதையும் படிக்க | ’கேஜிஎஃப் 2’ உடன் மோதும் அமிர்கானின் ’லால் சிங் சத்தா’
இந்நிலையில், தற்போது 3 மாதம் கழித்து நடிகை சமந்தா சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் அவரின் விவாகரத்துப் பதிவை திடீரென நீக்கியுள்ளார்.
இதனால் , ரசிகர்கள் மீண்டும் நாக சைதன்யாவுடன் சமந்தா இணைய உள்ளாரா எனக் குழப்பம் அடைந்து வருகிறார்கள். இதுகுறித்து சமந்தா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
முன்னதாக, சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாக சைதன்யாவுடன் இருக்கும் புகைப்படங்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது.