நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அழகிய ராட்சசி! நந்தினியாக ஐஸ்வர்யா ராய் - வைரலாகும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனின் புதிய போஸ்டர்

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியா நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் தோற்றப் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

News image
Updated On :6 ஜூலை 2022, 12:38 pm IST

பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினியா நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் தோற்றப் புகைப்படம் வெளியாகியுள்ளது. 

கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்தை இயக்குநர் மணிரத்னம் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படங்களாக இயக்கியுள்ளார். இதில் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்குவரவிருக்கிறது. 

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னம், குமாரவேல் ஆகியோர் திரைக்கதை அமைத்துள்ள இந்தப் படத்துக்கு ஜெயமோகன் வசனம் எழுதியுள்ளார். 

இந்தப் படத்தில் ஆதித்தகரிகாலனாக விக்ரமும், ராஜ ராஜ சோழனாக ஜெயம் ரவியும், வந்தியத் தேவனாக கார்த்தியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக திரிஷாவும் நடித்துள்ளனர். இவர்களின் விக்ரம் மற்றும் கார்த்தியின் தோற்றப் புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி வைரலாகி வருகின்றன. 

Story image

இந்த நிலையில் இந்தப் படத்தில் நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா ராயின் தோற்றப் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வனின் நாவலை பொறுத்தவரை முக்கிய எதிர்மறை கதாப்பாத்திரமாக நந்தினியின் பாத்திரம் இருக்கும். அந்த வகையில் அதி முக்கியத்துவமான வேடம் அது.

பேரழகியாக வர்ணிக்கப்பட்டிருக்கும் நந்தினி கதாப்பாத்திரத்துக்கு ஐஸ்வர்யா ராய் மிக சரியான பொறுத்தம் என்பது அனைவரின் கருத்தாக இருந்தது. தற்போது இந்த போஸ்டர் அதனை உறுதிபடுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.